Tamilcinemaa4:
* விஜயின் பிகில் திரைப்படம் பல தடைகளை தாண்டி வசூலில் சாதனை படைத்தது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான் . தற்போது பிகில் படம் வெளியாகி டிசம்பர் 13 அன்று தனது 50 வது நாளை நிறைவு செய்தது .
பிகில் திரைப்படத்தின் 52வது நாளான இன்று டிசம்பர் 15 ஞாயிறு சென்னையில் பிரபல திரையரங்கமான ரோகினி திரையரங்கத்தில் காலை 10.30 மணிக்காட்சிக்கு தளபதி விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக விஜயின் பிகில் கதாப்பாத்திரத்தில் ஒன்றான ராயப்பன் உருவத்தில் சிலையாக வடிவமைத்து ரோகினி தியேட்டரில் பாலபிஷேகம் செய்து கொண்டாடினர் . இன்றும் பிகில் படமானது சென்னையில் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது .
இதெல்லாம் தளபதி ரசிகர்களின் வெறித்தனம் என்று சொல்லலாம் ஏனென்றால் நாளுக்கு நாள் தளபதி விஜயின் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகை ஆகாது . மேலும் இன்று மாலை 7 மணி பிகில் காட்சிக்கு ரோகினி தியேட்டருக்கு படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நேரில் வரப்போவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
No comments:
Post a Comment