GRG

Sunday, December 15, 2019

சச்சின் தேடும் நபர் சென்னை பெரம்பூரை சேர்ந்தவராம் ? சச்சினுக்கு உதவிய தமிழன் காரணம் ?


Image result for sachin elbowTamilcinemaa4:

                * இந்திய கிரிக்கெட்டின் சிறந்த பேட்டிங்  ஜாம்பவான் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான் . அவரின் பேட்டிங்கிற்கு தீவிரமான ரசிகர்கள் ஏராளம் .அப்படிப்பட்ட சச்சின் டெண்டுல்கருக்கு தமிழன் ஒருவர் மிகச்சிறந்த ஆலோசனை வழங்கியிருக்கிறார் அதுவும் ஹோட்டலில் வேலை பார்க்கும் ஒருவர் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா ?

                    இதோ அந்த உண்மை தகவல் உங்களுக்காக டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக சச்சின் அவர்கள் 2001 ஆம் ஆண்டு சென்னை தாஜ் கோரமண்ட் ஹோட்டலில் தங்கியிருந்த போது அப்போது சச்சினுக்கு காஃபி பரிமாறுவதற்க்காக வந்த சென்னை பெரம்பூரை சேர்ந்த குரு பிரசாத் என்பவர் கிரிக்கெட் ஆடும்போது கையில் அடிபடாமலிருக்க அணியும் பாதுகாப்பு பட்டை அதாவது ஆங்கிலத்தில் எல்போ பேட் குறித்து சச்சின் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் . அதற்கடுத்து எல்போ பேட்டின் வடிவத்தை மாற்றி அமைத்துள்ளார் சச்சின் .

                 சென்னையில் நடந்த அந்த போட்டியில் சச்சின் அவர்கள் 128 ரன்களை அடித்தார் அதன்மூலம் இந்திய அணி 501 ரங்களுடன் வெற்றி பெற்றது . மேலும் இந்த தொடரை இந்திய அணி ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதை யாரும் மறக்க முடியாது .

                          
Image result for GURUPRASATH PERAMBUR தற்போது இந்த தகவலை சச்சின் அவர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் . மேலும் அந்த நபரை சந்திக்க ஆசையோடு இருக்கிறேன் என்றும் நீங்கள் தான் உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் .


டுவிட்டர் பதிவு

            தற்போது இந்த தகவலை அறிந்த பெரம்பூரை சேர்ந்த குரு பிரசாத் நான் இந்த சம்பவத்தை நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றும் அவ்வளவு பெரிய கிரிக்கெட் ஜாம்பவான் என்னை ஞாபகம் வைத்திருப்பது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது எனவும் கூறியுள்ளார் .

No comments:

Post a Comment