GRG

Saturday, December 14, 2019

திருமணமானவரா நீங்கள் ஜாக்கிரதை ? சென்னையில் நடந்த நூதன மோசடி

Tamilcinemaa4:


                   * சென்னையில் இன்று காவல்துறை அதிகாரிடம் படத்தில் இருக்கும் தொழிலதிபர் பள்ளிக்கரணையைச் சேர்ந்த பாலசந்தர் வயது 39 தன்னுடைய கம்பெனியில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் மீது புகார் கொடுத்தார் . புகாரை விசாரித்த அதிகாரி திடுக்கிட்டார் .

          அதில் பாலசந்தர் வடபழனி , மும்பை , துபாய் நகரங்களில் தனியார் கம்பெனி நடத்திவருவதாகவும் அவருடைய மனைவி 2015ல் இறந்துவிட்டார் . அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் குழந்தைகள் மாமனார் வீட்டில் வளர்வதாகவும் தெரிவித்தார் .

               மேலும் கடந்த ஜூன் மாதம் துபாயிலிருந்து சென்னை ஏர்போர்ட் வந்த தம்மை தன்னுடைய வடபழனி ஆபீசில் வேலைபார்க்கும் பெண் ஒருவர் அழைத்து செல்ல  வந்தார் . அந்த பெண் பள்ளிக்கரணையில் வசிப்பதாகவும் பெற்றோர்களை இழந்ததாகவும் அவருடைய உடன் பிறந்தவர்கள் பெங்களூரில் வசிப்பதாகவும் கூறினார் . மேலும் தனக்கு 38 வயதாகி இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதாகவும் கூறியுள்ளார் .

             இதனால் அந்த பெண் மீது எனக்கு பரிதாபம் ஏற்பட்டது பின்னர் நெருங்கி பழகினோம் . அந்த பெண் தன்னுடைய கம்பெனியின் எம்டி என்றும் என்னுடைய மனைவி என்றும் கம்பெனியிலும், வரும்   கஸ்டமர்களிடமும் கூறிவந்தார் . நானும் என் அம்மாவிடம் அந்த பெண்ணைப்பற்றி கூறினேன் மேலும் தன் இரண்டு குழந்தைகளை பார்த்துக்கொள்ள அவர் பொருத்தமானவர் என்றும் அவரை இரண்டாவது மணமுடிக்க போகிறேன் என்றும் கூறினேன் . என் அம்மாவும் சம்மதம் தெரிவித்தார் .

               அப்போது என் அம்மா  தனது 5 பவுன் நகையை பரிசாக அவளுக்கு கொடுக்க சொன்னார் நானும்அவளிடம்  கொடுத்து விட்டேன் . திடீரென்று அந்த பெண் தன் வளர்ப்பு மகள் கல்யாணத்திற்கு வாங்கிய 7லட்சம் ரூபாய்க்கு வட்டி கட்டமுடியவில்லை என்று சொன்னார் . இதனால் அவருக்கு சம்பளமாக வழங்கிய 60000ரூபாய் மேல் 40000ரூபாய்  சேர்த்து  கடந்த 6 மாதங்களாக கொடுத்து வருகின்றேன் .

     அடுத்து அவளுடைய பாஸ்போர்ட் பிளாக் லிஸ்டில் உள்ளதாக தெரிவித்தார் அதை சரி செய்ய மேலும் சில லட்சங்களை செலவு செய்தேன் . அப்போது தான் அந்த பெண்ணைப்பற்றிய பல திடுக்கிடும் விஷயங்கள் எனக்கு தெரியவந்தன . நானும் அந்த பெண்ணும் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம் அப்போது அந்த பெண் புகை பிடிப்பதும் மது அருந்துவதும் எனக்கு பிடிக்கவில்லை இதனை நிறுத்தி விடு என்று சொன்னேன் அவள் கேட்கவில்லை . அந்த பெண்ணிற்கு போலீஸ் ஒருவரிடம் தொடர்பு உள்ளதை கண்டுபிடித்தேன் இதைப்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விசாரிக்கும்போது அந்த பெண்ணின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் எனவும் அங்கு அவர் 2006 முதல் 2016 வரை பஞ்சாயத்து தலைவியாக இருந்தார் மேலும் அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் மற்றும் ஒரு பெண் குழந்தை இருப்பதை தெரிந்து அதிர்ந்து போனேன் .

              ஆனால் கணவரைப் பிரிந்து அவள் வந்துவிட்டாளாம் இது குறித்து நான் அவளிடம் கேள்விகேட்டேன் அதற்கு அவள் என்னிடம் பேசுவதை தவிர்த்தார் . மேலும் என்னுடைய லேப்டாப் ,கிரெட்டிட்கார்ட் , நான் கொடுத்த பணத்தை எல்லாம் திரும்ப கேட்டேன் அதற்க்கு,நானும் அவளும் வடபழனி கோவிலில் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை போலீஸ் ஸ்டேஷனில் காட்டி புகார் தருவதாக தன்னை மிரட்டுகிறார் .

           மேலேம் தாம் ஒரு தவறும் செய்ய வில்லை அந்த பெண்ணின் மீது இறக்கப்பட்டது, எனக்கும் என் பணத்திற்கும் என் குடும்பத்திற்கும் எவ்வளவு பிரச்சனையாக மாறிவிட்டது என்று  பாலச்சந்தர் காவல் துறைஅதிகாரிகளிடம் கூறி வருகிறார் . மேலும் இது போல் யாரும் ஏமாறக்கூடாது எனவும் இத்தகைய மோசமான பெண்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும் என்றும் கூறினார் .

        இறக்கப்பட்டது குத்தமா என்று வடிவேல் சொல்லும் கதையாகத்தான் இருக்கிறது .
         
             






No comments:

Post a Comment