GRG

Wednesday, December 18, 2019

அஜித் வளர்க்கும் மலைப்பாம்பு வனத்துறையினர் தீவிர தேடல் வேட்டை ? காரணம் கேட்டால் அதிர்ந்து போவீர்கள் ?


                                                          Tamilcinemaa4 

                     * தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தல அஜித் மலைப்பாம்பு ஒன்றை வளர்ப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருந்தன . முதலில் இதனை புரளி என கவனிக்காமல் இருந்தனர் வனத்துறை அதிகாரிகள் தற்போது அது உண்மை என தெரியவந்துள்ளது .

             நடிகர் அஜித்திடம் மானேஜராக இருப்பவர் சுரேஷ் சந்திரா அவரின் உதவியாளர் நாசர் இவ்விருவரும் 3 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வளர்த்து வருகின்றதை அறிந்த வனத்துறையினர் இன்று அவர்களின் வீட்டில்  தேடுதல் வேட்டை நடத்தினர் . அதில் இரண்டு மலைப்பாம்புகளை வனத்துறையினர் கைப்பற்றினர் . மேலும் இந்த  வகை மலைப்பாம்பானது சுமார் 8 முதல் 10 அடி நீளம் வளரக்கூடியவையாகும் .

   மேலும் இது குறித்து அவர்களிடம் விசாரணை செய்ததில் மலைப்பாம்பை வளர்த்தால் ராசியாக இருக்கும் என்று காரணத்தை தெரிவித்தனர் . அஜித் வீட்டில் பாம்பு வளர்க்கப்படுகிறதா என்று கேட்டதற்கு அவர்கள் இல்லை என பதிலளித்தனர் . இருந்தாலும் சந்தேகமடைந்த அதிகாரிகள் படத்தில் நடிப்பது அஜித் உங்கள் வீட்டில் ஏன் மலைப்பாம்பை வளர்க்குறீர்கள் என கேட்டதற்கு . அவர்கள் ஏதும் சொல்லவில்லை .

           இதனால் வனத்துறை அதிகாரிகள் அடுத்ததாக நடிகர் அஜித்குமார் வீட்டில் மலைப்பாம்பை தேடி தேடுதல் வேட்டை மேற்கொள்ளவிருக்கின்றனராம் . மேலும் இணையதள வாசிகள் சிலர் எத்தனை சதுரங்க வேட்டை திரைப்படம் வந்தாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள் என கூறிவருகின்றனர் .
 
          மேலும் சிலர் மலைப்பாம்பு ஆண்மைக்கு மருந்தாக பயன்படுகின்றது அதனால் தான் இவர்கள் மலைப்பாம்பை வளர்க்கிறார்கள் எனவும் கருத்துக்களை  வருகின்றனர் . எது எப்படியோ உண்மை என்ன வென்று அஜித் மற்றும் அவருடைய மேனேஜருக்கு மட்டும் தான் தெரியும் என்பதில் சந்தேகமில்லை .


No comments:

Post a Comment